மழைப் பாட்டு

கொட்டுது பார் மழை!
கொண்டு வா ஒரு குடை!
வெட்டுது பார் மின்னல்!
பார்க்காதே அது இன்னல்!
முழங்குது பார் இடி!
வெளியே போவது எப்படி?
பொழியுது பார் முகில்!
விளைந்திடும் பார் வயல்!
கூவுது பார் குயில்!
ஆடுது பார் மயில்!
மழை பெய்தாலே மகிழ்வுதான்!
மறைந்திடும் நம் வறட்சிதான்!