முதலாளியின் பெருந்தன்மை!!

முதலாளியின் பெருந்தன்மை!!

“எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”

“ரொம்ப நன்றி சார்.”

“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!”


****

கம்ப்யூட்டர் கடவுள்

“முதன்முதல்ல மல்டி டாஸ்கிங்க் (Multi-tasking) கண்டுபிடிச்சது யாரு?”
“கடவுள்தான்.. “
“எப்படிச் சொல்றே?”
“அவர் கிட்ட தான் நிறைய கைகள் இருக்கே!”

****

மோட்சம் நிச்சயம்!

“நர்ஸ்.. ஆபரேஷன் முடிஞ்சி நான் கண் முழிச்ச உடனே என் மனைவியைப் பாக்கணும்.”

“கவலைப்படாதீங்க.. கடவுளையே நீங்க பாப்பீங்க!”

****

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."